×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் அக்காவால் நேர்ந்த விபரீதம்!.. மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை.!!

மனைவியின் அக்காவால் நேர்ந்த விபரீதம்!.. மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை.!!

Advertisement

குடும்ப தகராறில் மகளுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்து விட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் இருக்கும் பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (38). இவர் லாரி ஓட்டுநராக இருந்தார். இவருக்கு அபிநயா (9) என்ற மகளும், மனோஜ்குமார்(7) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இவரது மனைவி உடல் நல குறைவால் இறந்து விட்டார்.  

கணேசனின் மகன் விளாத்திகுளத்தில் இருக்கும் தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். தனது மகளுடன் கணேசன் பேர்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் கணேசன், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரது மனைவியின் அக்கா ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ராதிகா கோபித்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதை தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தியடைந்த கணேசன், நேற்று அவரது மகள் அபிநயாவுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்ற உடற்கூராய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சசம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viruthunagar District #Siva Kasi #Family Dispute #police investigation #Commits Suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story