×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மது போதை தலைக்கேறிய நிலையில்... தாத்தா பாட்டியை விஷம் வைத்து கொலை செய்த பேரன்...!

மது போதை தலைக்கேறிய நிலையில்... தாத்தா பாட்டியை விஷம் வைத்து கொலை செய்த பேரன்...!

Advertisement

விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மனைவி மணி. இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் என நான்கு பிள்ளை உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 

மூத்த மகன் முருகன் கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகேயுள்ள காடாம்புலியூரில் வசித்து வருகிறார். இவர்களின் மகன் அருள்சக்தி (19). நேற்று மாலை அருள்சக்தி பில்லூர் கிராமத்தில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டிற்கு மது போதையில் உணவு மற்றும் குளிர்பானம் வாங்கி சென்றுள்ளார்.

அருள்சக்தி, குளிர்பானத்தில் விஷம் கலந்து வலுகட்டாயமாக தாத்தா ஆறுமுகம் மற்றும் பாட்டி மணி இருவரையும் குடிக்க வைத்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு சென்ற அருள்சக்தி போதையில் தன் தந்தையிடம் உன் அப்பாவையும், அம்மாவையும் கொலை செய்துவிட்டேன் உன்னையும் கொலை செய்துவிடுவேன் என்று சொல்லியுள்ளான். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் உடனடியாக பில்லூரில் இருக்கும் உறவினர்களுக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆறுமுகம் மற்றும் மணி இருவரும் உயிரிழந்து சடலமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் தப்பி ஓடிய அருள்சக்தியை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Villupuram #Grandson who Poisoned his Grandparent #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story