×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடி போதையில் கணவன் செய்த காரியத்தால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: பரபரப்பு பின்னணி..!

குடி போதையில் கணவன் செய்த காரியத்தால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: பரபரப்பு பின்னணி..!

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதி லக்கான் தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி (39). இவர் வடமதுரையில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (30). இநத தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கருப்புசாமி அளவு கடந்த குடி போதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கருப்புசாமிக்கும் அவரது மனைவி கற்பகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தகராறாக முற்றிய நிலையில், குடி போதையில் இருந்த கருப்புசாமி அவரது மனைவியை கத்திரிக்கோலால் கழுத்து பகுதியில் கடுமையாக குத்தியுள்ளார்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து, அக்கம்பக்கத்தின வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த  வடமதுரை காவல்துறையினர், கற்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கருப்புசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #Vadamadurai #Murder #police arrest #Women Dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story