×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊருக்கு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

ஊருக்கு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

Advertisement

கோவில்பட்டி அருகே சிந்தலக்கரை சிங்கப்பூர் காலனியில் வசித்து வருபவர்கள் துரைபாபு - வாசுகி தம்பதியினர். இவர்களுக்கு ஜெயகிருஷ்ணா என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் வாசுகி தனது மகன் ஜெயகிருஷ்ணாவுடன் கொளக்கட்டான்குறிச்சி சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இளையரச நேந்தல் சாலையில் உள்ள கண் மருத்துவமனை அருகே வந்த போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனமானது திடீரென திரும்பியதால் பின்னால் சென்ற இவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வாசுகியை  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #women died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story