×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் காவல் நிலையத்தில் தஞ்சம்: ஒரத்தநாடு அருகே பரபரப்பு..!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் காவல் நிலையத்தில் தஞ்சம்: ஒரத்தநாடு அருகே பரபரப்பு..!

Advertisement

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் குஞ்சான் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கலைமதி (21). இவரும் பேராவூரணி பகுதியை சேர்ந்த விசித்திரன் (27) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இருந்த போதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனியே சந்தித்துக் கொண்ட காதல் ஜோடியினர் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதை அறிந்த கலைமதியின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.

இந்த நிலையில், நேற்று தங்களது வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியினர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் தங்களது பெற்றோர்கள் தங்களை பிரித்துவிடக்கூடும் என்று கருதிய காதல் ஜோடியினர், நேற்று மாலை பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thanjavur District #Orathanadu #Love Affair #love marriage #Shelter in Police Station
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story