×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்.! காவல்நிலையத்தில் அதிர்ச்சி புகார்.!

11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்.! காவல்நிலையத்தில் அதிர்ச்சி புகார்.!

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதன்காரணமாக சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. 

கார்த்தியால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தரப்பில் இருந்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் அரியலூர் அருகே உள்ள கோக்குடி கிராமத்தை சேர்ந்த செபஸ்டியன் என்ற வாலிபர் 17 வயது சிறுமியை 2 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரிடம் நெருங்கி பழகியதில் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #pregnant
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story