காட்டிற்குச் சென்ற மூதாட்டி கொடூர படுகொலை... காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
காட்டிற்குச் சென்ற மூதாட்டி கொடூர படுகொலை... காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்கச் சென்ற மூதாட்டி நகைகளுக்காக கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் மத்தகிரி ஊராட்சி பள்ளிக் கவுண்டர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மனைவி கன்னியம்மாள். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் கன்னியம்மாள் தனது சகோதரி வெள்ளையம்மாவை முத்துசாமிக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர் அனைவருக்கும் திருமணமான நிலையில் தனியாக வசித்து வருகின்றனர். முத்துசாமி சில காலங்களுக்கு முன்பு இருந்து விட்டதால் கன்னியம்மாள் தனது சகோதரி வெள்ளையம்மாள் மற்றும் அவரது மகன் விஸ்வநாதன் ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார் .