×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எங்களையா பாஸ் போட மாட்டேன்னு சொன்ன?!.. இப்போ பாரு!. மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்..!

எங்களையா பாஸ் போட மாட்டேன்னு சொன்ன?!.. இப்போ பாரு!.! மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்..!

Advertisement

நெல்லை மாவட்டம், அம்பை கிராமத்தை சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மகன்கள் பூதத்தான் (17), சிவ சண்முகம் (15). இவர்கள் அம்பை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளியில் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பூதத்தான் 11 ஆம் வகுப்பும், சிவசண்முகம் 9 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தது.

ஆனால் சகோதர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் காரணம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் அம்பையில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறிநின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று  நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற சகோதரர்கள் இருவரும் அங்குள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர். தகவலறிந்தது அங்கு சென்ற மாநகர உதவி காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் ஆய்வாளர் வாசிவன் மற்றும் பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Threatened to commit suicide #tirunelveli #Ambai #school students
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story