தேரின் மீது மின்சாரம் பாய்ந்து சோகம்.. 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி, 10 பேர் படுகாயம்.!
தேரின் மீது மின்சாரம் பாய்ந்து சோகம்.. 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி, 10 பேர் படுகாயம்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலிமேடு கிராமத்தில் அப்பர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் நேற்று தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், தேரின் மீது மின்சார கம்பி உரசியுள்ளது.
இதனால் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து, தேரில் இருந்தவர்களில் மற்றும் அதன் அருகே இருந்தவர்கள் என பலரும் தூக்கி வீசப்பட்டனர். தேரும் தீப்பற்றி எரிய தொடங்கியது. நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயனை அணைக்க, மீட்பு பணியில் ஈடுபட்டு உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். விபத்தில் 3 சிறார்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362