×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் ரெடி! தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!

thamilisai sountharajan talk about p chidhamparam

Advertisement


பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வேலூரில் நடந்த மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

ரிசர்வ் வங்கியில் இருந்து ஏன் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பெற்றீர்கள் என்று கேட்கிறார்கள். பொருளாதார மேதை என்று கூறப்பட்ட ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது 5 முறை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் பெற்றுள்ளார்.

சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்து தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. முதல்-அமைச்சர் கூறியதுபோன்று அவர் நாட்டுக்கு பாரமாகத்தான் இருந்துள்ளார். பொருளாதார பின்னடைவை சரிசெய்ய என்ன முயற்சி செய்யப்படுகிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் எதை எடுத்தாலும் அரசியலாக்குகிறார்கள். அதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. தி.க மாநாட்டுக்குப் போக ஸ்டாலினுக்கு தார்மிக உரிமையில்லை, தி.க மாநாட்டில் தீவிரவாதிகளை போல் பேசுபவர்களின் வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் அத்திவரதரை வந்து பார்த்தனர். ஸ்டாலின் வீட்டிலிருப்பவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.  

நாங்கள் மக்கள் நலனுக்காக ஆதரவு தெரிவிக்கிறோம். ஊழல்செய்தவர்கள் ஒருபோதும் மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது என கூறினார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #thamilisai soundarajan #p chidamparam
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story