இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலமரம் தா.பாண்டியன் காலமானார்.! இரங்கல் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்.!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
சிறுநீரக பிரச்சினையால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமீப காலமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தநிலையில் இன்று காலை தா.பாண்டியன் காலமானார். நேற்றைய தினம் அவரது உடல்நிலை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வயது 89. இந்தநிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362