×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி மற்றும் பிள்ளைகளை ஆசையுடன் பார்க்கவந்த ராணுவ வீரர்.! கண்ணிமைக்கும் நேரத்தில் தீவிரவாதிகள் செய்த கொடூரம்.!

தெற்கு காஷ்மீர், ஜப்லிபோராவைச் சேர்ந்தவர் முகமது சலீம் என்பவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்

Advertisement

தெற்கு காஷ்மீர், ஜப்லிபோராவைச் சேர்ந்தவர் முகமது சலீம் என்பவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். சலீமுக்கு திருமணமாகி 9 வயது மகள், 6 வயது மகன் உள்ளனர். இந்நிலையில், சலீம் விடுமுறைக்காக மனைவி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். 

தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் சென்ற சலீமை, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த ராணுவ வீரர் சலீமை மீட்டு மருத்துவமனைக்கு அளித்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சலீம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், சலீம் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றபோது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இரண்டு பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் காயம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Army man #terrorist
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story