மனைவி மற்றும் பிள்ளைகளை ஆசையுடன் பார்க்கவந்த ராணுவ வீரர்.! கண்ணிமைக்கும் நேரத்தில் தீவிரவாதிகள் செய்த கொடூரம்.!
தெற்கு காஷ்மீர், ஜப்லிபோராவைச் சேர்ந்தவர் முகமது சலீம் என்பவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்
தெற்கு காஷ்மீர், ஜப்லிபோராவைச் சேர்ந்தவர் முகமது சலீம் என்பவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். சலீமுக்கு திருமணமாகி 9 வயது மகள், 6 வயது மகன் உள்ளனர். இந்நிலையில், சலீம் விடுமுறைக்காக மனைவி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் சென்ற சலீமை, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த ராணுவ வீரர் சலீமை மீட்டு மருத்துவமனைக்கு அளித்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சலீம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், சலீம் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றபோது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இரண்டு பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் காயம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362