×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. தென் கிழக்கு வங்க கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. தென் கிழக்கு வங்க கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

Advertisement

தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் மேலும் இது இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் நிலைக் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 தினங்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 31ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை கடற்பகுதியை சென்றடையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக வருகின்ற 29 மற்றும் 31ம் தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cyclone #Sounth East bay of Bengal #Chennai Meteorological Centre
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story