×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்... போக்சோ சட்டத்தில் கைது..!!

பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்... போக்சோ சட்டத்தில் கைது..!!

Advertisement

பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த உறவுக்கார வாலிபரை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி  10-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் உறவினர் நல்லமருது (37) என்பவர் மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான நல்லமருது கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை. தனியாக இருந்த மாணவிக்கு நல்லமருது பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டி உள்ளார். நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை தாங்க முடியாததால்,மாணவி தனக்கு தொல்லை கொடுத்த நல்லமருதுவை பற்றி மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய்  இது குறித்து அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நல்லமருதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Virudhunagar District #Sexual Harassment #Threatened and raped #school girl #Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story