கொடுமையின் உச்சம்..! 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்.!
கொடுமையின் உச்சம்..! 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்.!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பரிதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். 57 வயது நிரம்பிய இவர் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 24 மற்றும் 20 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ராமலிங்கம் கடந்த சில நாட்களாக அவர் பணிபுரியும் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கடந்த சில நாட்களாக தகாத முறையில் வற்புறுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டி வந்துள்ளார்.
ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடரபாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362