×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுவிற்பனை செய்யும் நேரம் அதிகரிப்பு..! இனி இரவு 7 மணிவரை மதுவிற்பனை..! தமிழக அரசு அறிவிப்பு.!

Tasmac time extended 2 more hours in tamilnadu

Advertisement

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மூன்றாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட மதுக்கடைகள் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து மீண்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி வாங்கியது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் செயல்பட தொடங்கியுள்ளது. இதுவரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டுவந்த மதுக்கடைகள் தற்போது மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனி தினமும் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tasmac #chennai #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story