மதுவிற்பனை செய்யும் நேரம் அதிகரிப்பு..! இனி இரவு 7 மணிவரை மதுவிற்பனை..! தமிழக அரசு அறிவிப்பு.!
Tasmac time extended 2 more hours in tamilnadu
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மூன்றாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்பட மதுக்கடைகள் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து மீண்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி வாங்கியது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் செயல்பட தொடங்கியுள்ளது. இதுவரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டுவந்த மதுக்கடைகள் தற்போது மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனி தினமும் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362