போதும் சாமி..! பெருமூச்சுடன் மதுபிரியர்கள்.! போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை துவங்கியது.!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தநில
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. ஊரடங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டநிலையில், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டநிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை துவங்கியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362