தமிழக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் வசூல் எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.127.09 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.127.09 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுத்து வந்ததை அடுத்து கடந்த மே மாதம் முதல் தமிழக்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் விற்பனையில் தமிழகத்தில் ரூ.164.87 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.