மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை.! உஷாராகும் மது பிரியர்கள்.!
இந்தமாதம் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக், தமிழக அரசுக்கான வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என மது பாட்டிலில் விளம்பரம் செய்தாலும், குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் மதுவை அனுபவித்து வருகின்றனர். டாஸ்மாக் ஒரு நாள் இயங்காவிட்டாலும்கூட, கை கால் நடுக்கம் வந்துவிடும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் சில குடிமகன்கள்.
இந்தநிலையில், இந்த மாதம் மட்டும் டாஸ்மாக் கடை 3 நாட்கள் அடைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இந்தமாதம் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சரக்கை தவிர்க்க இயலாத மதுபிரியர்கள், முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும் ஆயத்தமாகின்றனர். இந்த மூன்று நாட்கள் மதுக்கடையை மூடுவதால் சந்தோஷமடையும் பெண்கள். எப்பொழுது தான் இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூடுவார்கள்? என கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362