பிப்.5 சென்னையில் டாஸ்மாக், பார்கள் செயல்படாது - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.!
பிப்.5 சென்னையில் டாஸ்மாக், பார்கள் செயல்படாது - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.!
இராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி டாஸ்மாக், பார்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடலூர் இராமலிங்கரின் நினைவு திட்டத்தை சிறப்பிக்கும் பொருட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதியின் கீழ், சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து டாஸ்மாக் மற்றும் பார் நாளை மூடப்படுகிறது.
அன்றைய நாளில் எக்காரணம் கொண்டும் கடையை திறந்து மதுபானம் விற்பனை செய்ய கூடாது. சட்டத்திற்கு புறமாக மதுபான விற்பனை நடைபெறுவது உறுதியானால், விதிமுறையின்படி கடும் நடவடிக்கையானது எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல, பிப். 5ம் தேதி தைப்பூச பெருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், பல கோவில் நகரங்களிலும் மதுபானக்கடைகள் அடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362