×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BJPonFire: முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரை திமுக ஊழல் லிஸ்ட் ரெடி.. ஏப்ரலில் வெளியீடு;அண்ணாமலை பரபரப்பு பேட்டி.! 

#BJPonFire: முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரை திமுக ஊழல் லிஸ்ட் ரெடி.. ஏப்ரலில் வெளியீடு;அண்ணாமலை பரபரப்பு பேட்டி.! 

Advertisement

 

ஏப்ரல் மாதம் திமுகவின் மொத்த ஊழல் தொடர்பான விவகாரங்களும் மக்களுக்கு வெளியிடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பாக பேசி இருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச் விலை குறித்து திமுக ஆதரவாளர்கள் சிலர் செய்த பதிவினால், அண்ணாமலை அதுகுறித்து விளக்கமளித்து இருந்தார். அப்போது, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை வாங்கிய கைக்கடிகாரத்திற்கு பில் இருக்கிறதா? அவர் அதனை முறைகேடாக வங்கியிருப்பார். ஒருமணிநேரம் அவகாசம் தருகிறேன். பில் இருந்தால் அவர் பொதுவெளியில் பதிவிடட்டும் என தெரிவித்து இருந்தார். 

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்க, சும்மா இருந்த சிங்கத்தை நீ சீண்டிவிட்டாய் என்ற பாணியில் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சொத்து, பினாமி, வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை பாஜகவினர் சேகரித்து வெளியிடப்போவதாக அண்ணாமலை பரபரப்புடன் பேசியிருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "எனது கைக்கடிகாரத்திற்கு ஏப்ரல் முதல் வாரம் பில் கொடுக்கிறோம். என்னிடம் பில் கேட்பவர்கள் யார்?. ஊழல்வாதிகளாக இருப்பவர்கள் என்னிடம் பில் கேட்கிறார்கள். இவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், முதல் முறையாக சாமானியனின் வருமானத்தை ஆட்சியில் இருப்பவர்கள் கேட்கிறார்கள். பில் மட்டுமல்லாது அனைத்தையும் தருகிறோம். 

திமுக மு.க ஸ்டாலின் குடும்பம், 13 அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம். இதுவே 2 இலட்சம் கோடி ரூபாயை தொடுகிறது. திமுகவினர் தொட்டுவிட்டார்கள். முடிவுரை நாங்கள் எழுதுவோம். இந்த பட்டியலில் கரூர் செந்தில் பாலாஜி இருக்கிறார். கரூரில் 650 ஏக்கர் நிலம், சாராய ஆலையில் உள்ள பங்கு, சுப்ரீம் கோர்ட்டில் சாராய அமைச்சர் வழக்கறிஞருக்கு இ.டி கேசில் வழக்காட கொடுக்கும் ஒருநாள் பணம், தமிழகத்தில் சாமானியன் 10 ஆண்டுகள் சம்பாதித்தால் மட்டுமே கிடைக்கும். 

அடுத்த ஒரு மாதத்திற்குள் மக்கள் கையில் அதிகாரம் கொடுக்கப்படும். திமுகவின் பினாமி சொத்து இருப்பது மக்களுக்கு தெரிந்தால், அவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். அவர்களின் விபரம் பாதுகாக்கப்படும். ஊழலை எதிர்க்கக்கூடிய சாமானியனுக்கு செயலி வழியே பதிவிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊழலும் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்படும். 

ஏப்ரல் மாதம் பில்லை விட அவர் கேட்ட அனைத்தையும் கொடுத்துவிடுவோம். 70 ஆண்டுகாலம் தமிழகத்தில் நடக்காதது நடக்கப்போகிறது. அன்று ஊழல் நடந்ததால் திமுக காலியானது. 2ஜியால் காங்கிரஸ் சரிவை சந்தித்தது. இன்று மீண்டும் வந்துள்ள திமுக விரைவில் மறையப்போகிறது" என்று தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #bjp #politics #annamalai #MK Stalin #tamilnadu politics
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story