மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. தகுதிகள் என்ன?.!
மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. தகுதிகள் என்ன?.!

மாதம் ரூ.1000 பெற நினைக்கும் மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தமிழ்நாடு அரசு சார்பில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் வாயிலாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்
மேலும் மாணவர் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியிலும், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். பின் உயர்கல்வி பயிலும் போது அவர்களின் தேவையை உறுதி செய்ய இந்த திட்டத்தின் வாயிலாக ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: உடலுறவின் போது உயிரைவிட்ட மனைவி?.. நிர்வாணமாக்கி கட்டிவைத்து டார்ச்சர்.. கணவரின் பகீர் செயல்.!!
இத்திட்டம் மூலம் பயனடையும் மாணவர்களின் வயது வரம்பு 21 முதல் 30க்குள் இருக்கலாம். அதே போல ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது கல்லூரி நிர்வாகத்தின் அறிவுரைக்கு ஏற்ப இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் கிழட்டுக் காமுகன் செய்த கீழ்த்தரமான செயல்.. வெளுத்துவாங்கிய பொதுமக்கள்.!