மார்னிங் மகிழ்ச்சி செய்தி! ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு..! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே அரசு வழங்கும் பரிசு தொகுப்பு மக்கள் மத்தியில் தனி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 பொங்கல் பரிசு குறித்து தற்போது புதிய எதிர்பார்ப்புகள் உருவாகி வருகின்றன.
பொங்கல் பரிசு – கடந்த ஆண்டுகளின் நிலை
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்புவுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக, ரொக்க தொகை வழங்கப்படாமல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! சற்று முன்.... ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000..... .? வெளியான புதிய தகவல்.! நிதிதுறைக்கு அரசு உத்தரவு!
2026 தேர்தல் – ரொக்க பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மீண்டும் ரொக்க பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தேர்தல் ஆண்டாக இருப்பதால், இந்த முடிவு அரசியல் ரீதியாகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
டோக்கன் விநியோகம் மற்றும் பரிசு வழங்கும் தேதி
கடந்த ஆண்டைப் போலவே, ஜனவரி 3 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 9 முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரொக்க பணம் வழங்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2026 பொங்கல் பரிசு குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. அரசு எடுக்கும் இறுதி முடிவு, வரும் நாட்களில் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய திட்டம்! ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!