×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகமே உச்சகட்ட மகிழ்ச்சி!! இந்தமுறை இதற்கெல்லாம் அனுமதி!! முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையும்நிலையில் தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதேநேரம் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதில் இருந்து திரையரங்குகளை திறப்பதுவரை பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி,

1. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தமிழகத்தில் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2. செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

3. தமிழகம் முழுவதும் நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

4. இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

5. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

6. தமிழகத்தில் முழுவதும் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி.

7. தகவல் தொழில்நுட்பம், சேவை நிறுவனங்கள் 100% சதவீத பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

8. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #lockdown
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story