வேற லெவல் சாதனை.... முகம் முழுக்க தேனீக்கள்... 5 மணி நேரம் 3 நிமிடம் அசையாமல் இருந்து உலக சாதனை படைத்த முருகன்! திகில் வீடியோ…!!!
முகம் முழுவதும் தேனீக்களை பரவவிட்டு 5 மணி நேரம் 3 நிமிடங்கள் அமர்ந்த தமிழகத்தைச் சேர்ந்த முருகன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன், தனது முகம் முழுவதும் இந்தியத் தேனீக்களை பரவவிட்டு தொடர்ந்து 5 மணி நேரம் 3 நிமிடங்கள் அமர்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த முயற்சி ‘சீனா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ உலக சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகம் முழுவதும் தேனீக்கள்; 5 மணி நேரம் அசையாமல் இருந்த முருகன்
வழக்கத்திற்கு மாறான இந்த சாதனை முயற்சியில், ஏராளமான தேனீக்களை தனது முகம் மற்றும் உடலைச் சுற்றிலும் பரவவிட்டு முருகன் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். மொத்தம் 5 மணி நேரம் 3 நிமிடங்கள் இந்த நிலையில் இருந்து சாதனையை நிறைவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி... கடன் தள்ளுபடிக்கான இறுதி பட்டியல் வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு...!!!
உலக சாதனையை விட விழிப்புணர்வே முக்கியம்
இந்த முயற்சியின் பின்னணியில் தனிப்பட்ட சாதனை மட்டுமே நோக்கமாக இல்லை என முருகன் கூறியுள்ளார். தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த சவாலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேனீ வளர்ப்பை ஒரு நல்ல வேலைவாய்ப்பாகவும், வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் மாற்றுவதற்கான ஆர்வத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்பதும் தனது நோக்கம் என முருகன் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே ஆபத்தானதாக கருதப்படும் இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு
மூச்சை முட்ட வைக்கும் வகையில் அமைந்த இந்த உலக சாதனை முயற்சியின் வீடியோ மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. சாதனையை பாராட்டி பலரும் கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இதை பலர் வரவேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING : அட அட... செம! பெண் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன அமைச்சர்! தவெக அரசு காட்டும் அதிரடி!!!