தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் புதிதாக 1,289 பேர் கொரோனாவால் பாதிப்பு..
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,66,982 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 466 பேருக்கும், செங்கல்பட்டில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,599 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 668 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362