×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஸ்டிக்கரை உடனே கிழிங்க.... காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு.!

ஸ்டிக்கரை உடனே கிழிங்க.... காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு.!

Advertisement

காவலர்கள், தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் 'போலீஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் ,போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sylendra Babu #police #Sticker
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story