×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிகப்பிரசங்கிதனமா பேசி அசிங்கப்பட வைக்காதீங்க. ! அண்ணாமலையை விளாசிய எஸ்.வி சேகர்!!

அதிகப்பிரசங்கிதனமா பேசி அசிங்கப்பட வைக்காதீங்க. ! அண்ணாமலையை விளாசிய எஸ்.வி சேகர்!!

Advertisement

மிக்ஜாம் புயலால் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை பொழிந்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட மத்திய ஆய்வு குழு வருகை தந்திருந்தது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய குழு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து கூறுகையில, தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு தெரிவித்தது சம்பிரதாயமானது. அதில் தனக்கு எந்த உடன்பாடும் இல்லை. மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளை குற்றம் சாட்டமாட்டார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியதற்கு விமர்சனம் செய்து தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி சேகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மத்திய தலைமை சந்தோஷப்பட்டு தமிழக தலைவரா அண்ணாமலையை போட்டது கூட இங்க எவ்வளவோ பேருக்கு உடன்பாடு இல்லை. நாங்க பொறுத்துக்கலையா. அதிகப்பிரசங்கித்தனமாக பேசி நம்ம மேலிடத்தையே அசிங்கப்பட வைக்ககூடாது. புரியுதா Ex IPS என குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#annamalai #sv sekar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story