×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடத்தையில் சந்தேகம்... நடு ரோட்டில் வைத்து செவிலியர் கொடூர படுகொலை.! காவல்துறையில் சரண்.!

நடத்தையில் சந்தேகம்... நடு ரோட்டில் வைத்து செவிலியர் கொடூர படுகொலை.! காவல்துறையில் சரண்.!

Advertisement

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்  மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சரண் அடைந்த கணவரிடம் காவல்துறையின் நர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்  பிரபாகரன் வயது 35. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணிற்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சூர்யா செவிலியர் ஆக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த நான்கு வருடங்களாக  பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரபாகரன் அடிக்கடி தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு வந்ததால்  கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி  சூர்யா பிரிந்து சென்று தனது குழந்தையுடன்  தனியே வசித்து வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பணிக்குச் சென்ற சூர்யாவை வழிமறித்த அவரது கணவர் பிரபாகரன் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்திலே துடித்து பலியானார் சூர்யா.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்ற பிரபாகரன் தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்ததாக  வாக்குமூலம் அளித்துவிட்டு சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #sivagangai #Devakottai #Crime #wifemurdered
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story