×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்க்கு மெசேஜ் அனுப்பி விட்டு மகள் எடுத்த விபரீத முடிவு!பின்னணியில் நடந்தது என்ன?

Suside

Advertisement

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் - சத்யா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சதீஷ் குமார் மற்றும் சத்யா தம்பதியினருக்கு இடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரு தடவை சத்யா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கியுள்ளார்.

அதனை அடுத்து சத்யாவை சமாதானம் செய்து கணவர் வீட்டில் கொண்டு விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் அனைவரும் தூங்க சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை பார்த்த போது சத்யா கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் சத்யா தனது தாய்க்கு இரவில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எனது சாவுக்கு எனது கணவர் தான் காரணம் என்று அனுப்பியுள்ளார். இதனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சத்யாவின் தற்கொலைக்கு யார் காரணம் என திவீரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suside
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story