×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி சம்பவம்...ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் 17 வயது மாணவி தற்கொலை...!

அதிர்ச்சி சம்பவம்...ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் 17 வயது மாணவி தற்கொலை...!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அப்பகுதியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மாணவி கடந்த மாதம் திடீரென காணவில்லை என்று  பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் மாணவியுடன் பழகி வந்ததாகவும், மேலும் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போட்டோ, வீடியோ எடுத்துள்ளார் அந்த வாலிபர். இந்நிலையில் அந்த வாலிபருடன் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த மாணவியை மணிகண்டனின் தந்தை மற்றும் அவரது தம்பி மகன் ஆகியோர் மிரட்டியதாகவும் மேலும் ஆபாசமாக இருக்கும் படத்தை வெளியிட்டு விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன மாணவி கடந்த தீபாவளி அன்று திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரக்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் பெற்றோர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவியின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி உயிரிழந்தார். மாணவி உயிரிழப்பு அறிந்த பெற்றோர் மற்றும் மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#student #Sucide #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story