படிக்க ஆசையிருந்தும் பணம் இல்லை... மாணவி எடுத்த விபரீத முடிவு..! கண்ணீரில் பெற்றோர்..!
படிக்க ஆசையிருந்தும் பணம் இல்லை... மாணவி எடுத்த விபரீத முடிவு..! கண்ணீரில் பெற்றோர்..!
மேற்படிப்பிற்கு பணம் இல்லாததால், மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகள் இந்திராணி. இவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் இந்திராணியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் விஷம் அருந்தியது தெரியவந்தது.தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பரிதாபமாக இந்திராணி உயிரிழந்துள்ளார். பின் இந்த சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இந்திராணி கல்லூரி முடிந்து மேல்படிப்பு படிக்க விரும்பிய தெரியவந்தது.
தனது கல்லூரி மேற்படிப்பிற்கு பணம் இல்லாததால் பெற்றோர் மறுத்த நிலையில், மனமுடைந்த மாணவி விஷம் அருந்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362