தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடர் இருமல்..! சளியுடன் வந்த இரத்தம்! பெண்ணின் மூக்கிற்குள் இருந்த மர்ம பொருள்! அதிர்ந்த மருத்துவர்கள்!

Stud screw stuck in nose

Stud screw stuck in nose Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் பட்டம்மாள் விடுதி என்னும் பகுதியை சேர்ந்தவர் 55 வயது நிரம்பிய புஷ்பம். இவர் கடந்த சில மாதங்களாக வறட்டு இருமல் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருமும் போது இருமலுடன் சேர்ந்து இரத்தம் வர தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து புதுகோட்டை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் புஷ்பம். புஷ்பத்தை சோதித்த மருத்துவர்கள், மூக்குத்தியின் திருகாணி ஒன்று நுரையீரலுக்கு செல்லும் மூச்சுக்குழலில் சென்று அடைத்து கொண்டிருப்பதை கண்டறிந்தனர்.

திருகாணி கழண்டும் மூக்குத்தி கீழே விழாமல் இருந்ததாலும், மூக்கில் இருந்த திருகாணி மூச்சுக்குழல் வழியே நுரைஈரலுக்கு அடியில் சென்றதால் என்ன நடந்தது என்பது புஷ்பத்திற்கு தெரியவில்லை. இதனை அடுத்து, தீவிர ஆலோசனைக்கு பிறகு, அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல், அகநோக்கி வழியாக திருகாணியை அரசு மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

இதுவே தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தால் சுமார் 1.5 லட்சம் வரை செலவு வந்திருக்கும் என்றும், இங்கு இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட நபரின் நுரைஈரலில் தொற்று ஏற்படும் முன்னரே மருத்துவர்களின் சாதுரியமான செயலால் திருகாணி நீக்கப்பட்டு, நோயாளி காப்பாற்றப்பட்டது குறித்து பலரும் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mystery #myths
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story