×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும்! சிறந்த உதாரணமாக இருக்கும் பிரபல இயக்குனரின் மகன்

Steps followed by nandu manirathinam after foreign return

Advertisement

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இயக்குனர் மணிரத்தினம் நடிகை சுஹாசினியின் மகன் நந்தன் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் தான் பரவுகிறது என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான்.

இதனால் அரசு வெளிநாடுகிளில் இருந்து வந்தவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் 18 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வந்துள்ள இயக்குனர் மணிரத்தினம் நடிகை சுஹாசினி தம்பதியரின் மகன் நந்தன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி இருக்கிறார்.

இதனை மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்க வேண்டுமென்று தனது மகனின் நிலையை குறித்து நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் நந்தன் கடந்த 5 நாட்களாக எப்படி தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார் மீதமுள்ள நாட்களில் எப்படி இருக்க போகிறார் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #Self isolation #Nandu manirathinam #Suhasini
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story