×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்பில் திடீர் திருப்பம்... இது கொலை தான்... ஆசிரியையின் தந்தை புகார்...

கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்பில் திடீர் திருப்பம்... இது கொலை தான்... ஆசிரியையின் தந்தை புகார்...

Advertisement

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் இறப்பு ஒரு கொலை தான் என்றும் இதில் தேவையின்றி தனது மகளை சீக்க வைத்துள்ளனர் என்று ஆசிரியையின் தந்தை திடீர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் ஸ்ரீமதியின் மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாணவியின் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கணித ஆசிரியை கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் விழுப்புரம் நீதிமன்றத்தில் அஃபிடவிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை தற்கொலையாக பள்ளி நிர்வாகம் ஜோடித்துள்ளது என்றும் தேவையின்றி இந்த வழக்கில் எனது மகள் கிருத்திகாவையும், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியாவையும் சிக்க வைத்துள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும், மாணவி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று பிரபல செய்தி நிறுவனத்தை தனது மனுவில் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srimathi #Death incident #case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story