×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 தமிழர்கள் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அதிர்ச்சி செயல்..! எல்லைதாண்டி மீன் பிடித்ததாக குற்றசாட்டு.!

12 தமிழர்கள் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அதிர்ச்சி செயல்..! எல்லைதாண்டி மீன் பிடித்ததாக குற்றசாட்டு.!

Advertisement

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படையால் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவதும், தமிழக மீனவர்களின் வலைகளை அழித்து, அவர்களை கடலில் இருந்து விரட்டியடிக்கும் கொடூரமும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

மேலும், தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிப்பதால் மீனவர்களுக்கு கண்ணீர் சோகமே எஞ்சியுள்ளது. மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகு விடுவிக்கப்படுவது இல்லை. 

இந்த நிலையில், நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது. ஏற்கனவே உள்நாட்டு பொருளாதார பிரச்சனையில் தவிக்கும் இலங்கை இந்தியாவிடம் கையேந்தியுள்ள நிலையில், தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srilanka #India #tamilnadu #Tamilnadu Fisherman #arrest #SriLanka Navy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story