×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள்.! இலங்கை மீனவர்கள் செய்த அட்டூழியம்.! அதிர்ச்சி சம்பவம்.!

நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள்.! இலங்கை மீனவர்கள் செய்த அட்டூழியம்.! அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சின்னத்தம்பி அவருடைய மகன்கள் சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் நேற்று மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவு 10 மணியளவில், வேதாரண்யம் நடுக்கடலில் வலைவிரித்து மீன்பிடித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அப்போது இலங்கை மீனவர்களை தமிழக மீனவர் சிவக்குமார் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் சிவகுமார் மீது அரிவாளால் இலங்கை மீனவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

மேலும், உடனிருந்த சிவகுமாரின் தந்தை மற்றும் சகோதரன் சிவாவை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலைகளை பறித்து கொண்டு, மேலும் அவர்களிடம் இருந்த சில பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த தமிழக மீனவர்கள் அவசர அவசரமாக அதிகாலையில் கரை திரும்பினர். இதில் காயமடைந்த மூன்று மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sea #fishermans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story