×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது தாயின் கள்ளதொடர்பை தெரிந்துகொண்ட மகன்.! சினிமா பாணியில் அடுத்தடுத்து அரங்கேற்றிய அதிர்ச்சி சம்பவங்கள்!!

son try to kill mother for her illegal relationship

Advertisement

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வசித்து வந்தவர் ராஜா. 45 வயது நிறைந்த அவர் அப்பகுதியில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது மர்ம நபர் ஒருவர் அவரை கடுமையாக தாக்கி,கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் ராஜாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த திலகவதி என்ற சத்துணவு அமைப்பாளரையும், அவரது மகன் 24 வயது நிறைந்த கௌதமையும் கத்தியால் குத்திவிட்டு அவர் தப்பி ஓடியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது கடை ஊழியர் ராஜாவிற்கும், திலகவதிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் இந்த தொடர்பு குறித்து தகவலறிந்த கௌதம் தனது தாயாரை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் ராஜாவுடன் தனது உறவை திலகவதி தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கௌதம் ராஜா மற்றும் திலகவதியை கொலை செய்ய திட்டமிட்டு கடையில் இருந்து வீடு திரும்பிய ராஜாவை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் . பின்னர் தனது வீட்டிற்கு சென்று தனது அம்மாவை  கத்தியால் குத்தி விட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #mother #son
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story