×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் பெற்ற தாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற மகன்... நடந்தது என்ன.?

குடிபோதையில் பெற்ற தாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற மகன்... நடந்தது என்ன.?

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு நதியா என்ற ஒரு மகள் உள்ளார். ஈஸ்வரன் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஈஸ்வரன் நேற்று இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ஈஸ்வரன் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனை ஈஸ்வரனின் தாய் செல்லாயி தட்டிக் கேட்டுள்ளார். இரவு முழுவதும் நீடித்த சண்டையால் மன உளைச்சலுக்கு ஆளான ஈஸ்வரன் ஆத்திரத்தில் விடியற்காலை 2 மணியளவில் அரிவாளை எடுத்து மனைவியை வெட்ட முயன்றுள்ளார்‌.

அதனை தாய் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் மேலும் கோபமான ஈஸ்வரன் பெற்ற தாய் என்று கூட பாராமல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அதில் செல்லதாயி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை தடுக்க வந்த மகளையும் வெட்டி விட்டு வெளியே வந்த ஈஸ்வரன் அருகில் இருந்த வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 80 வயதான முதியவர் பெரியனாண்டி அம்பலம் என்பவரையும் வெட்டியுள்ளார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் வீட்டிற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஈஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #Murder #son
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story