×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாவி!! சாவுறதுக்கு முன்னாடி அந்த பெத்த வயிறு எப்படி பத்தி எரிஞ்சிருக்கும்.. தந்தையுடன் சேர்ந்து பெத்த தாயை கொலை செய்த மகன்!

பெத்த தாயை தந்தையுடன் சேர்ந்து மகனே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள

Advertisement

பெத்த தாயை தந்தையுடன் சேர்ந்து மகனே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சி தொடார்ந்தாளம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 15 வயதில் 10 ஆம் வகுப்பு படித்துவரும் மகன் உள்ளார்.

பாலமுருகன் கவரிங் நகை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திவந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக சண்டை வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று மதியம் ஒரு மணி அளவில் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

அப்போது பாலமுருகனும், அவரது மகனும் சேர்ந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சந்தியாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சந்தியா சம்பவ இடத்திலையே இரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்து உயிரிழந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சந்தியாவை கொலை செய்த அவரது கணவர் பாலமுருகன் மற்றும் அவரது மகன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #dead #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story