×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செலவுக்கு பணம் தராததால் தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

செலவுக்கு பணம் தராததால் தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

Advertisement

புதுக்கோட்டை அருகே செலவுக்கு பணம் தரதால் தந்தையை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரை சேர்ந்தவர் மாதவன். கம்பி கடை நடத்தி வரும் இவருக்கு 2 மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இதில் கடைசி மகன் சதீஷ்குமார் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, சென்னையில் சில மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒன்றாக ஆண்டு காலமாக சொந்த ஊரில் அவரது தந்தைக்கு துணையாக இருந்துள்ளார். மேலும் மனநிலை பாதிப்புக்கு உள்ளான சதீஷ்குமார் மாத்திரை மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தனது தந்தையிடம் செலவிற்கு பணம் கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார். இதில் பணம் தர மறுத்த தந்தையை அறிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். இதனால் பயந்து போன மாதவன் வீட்டில் இருந்து வெளியே தெருவுக்கு ஓடிய நிலையில், சதீஷ்குமார் துறத்தி வந்து அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் குற்றவாளி சதீஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Annavasal #arrest #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story