×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மது போதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த செயல்.!

மது போதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த செயல்.!

Advertisement

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் தனது மனைவியுடன் மதுபோதையில் தகராறு செய்த தனது தந்தையை மூத்த மகன் பிரேம்குமார் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பிரேம் குமார் தனது தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.

இதனையடுத்து வேல்முருகனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பண்ணையின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேம்குமாரை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Son killed father #puthukottai #Ammapettai #Crime #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story