×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட கொடுமையே... பால் விற்ற பணத்தில் குடி... உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொள்ளி வைத்த மகன்... ஷாக்கிங் சம்பவம்.!

அட கொடுமையே... பால் விற்ற பணத்தில் குடி... உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொள்ளி வைத்த மகன்... ஷாக்கிங் சம்பவம்.!

Advertisement

பால் விற்ற பணத்தில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த தந்தையை சொந்த மகனே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது மகனை கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள டி.கோட்டையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி - பேச்சியம்மாள் தம்பதி. இவர்களுக்கு கருப்பசாமி, சஞ்சீவ் குமார்  என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் சஞ்சீவ் குமார் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மூத்த மகன் கருப்பசாமி தந்தையுடன் சேர்ந்து பால் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் பால் ஊற்றி கிடைக்கும் பணத்தில் கிருஷ்ணசாமி குடித்துவிட்டு வந்து அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து இருக்கிறார். இதன் காரணமாக தந்தை மற்றும் மகனிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவும் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த தந்தை கிருஷ்ணசாமிக்கும் மகன் கருப்பசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் உறங்கச் சென்றனர்.

அப்போது ஆத்திரம் தீராத கருப்பசாமி நள்ளிரவில் மது போதையில் உறங்கிக் கொண்டிருந்த தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். வலி தாங்க முடியாமல் கிருஷ்ணசாமி அலறவே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தையை கொன்ற கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #viruthunagar #Drunken Dad #burnt to death #Son Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story