×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனவை விட கொடூரம்.! மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பா மற்றும் தாத்தா! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

son and dad abused youn girl

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவருடைய இளைய  மகள் மட்டும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மூத்த மகள் மட்டும் அவரது தந்தையுடன் வந்து வசித்துள்ளார்.

இந்தநிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளங்கோவன் மூத்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை, தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர். 

இந்தநிலையில் தற்போது 9-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் மூலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்ததில் தாத்தா மாரிமுத்து மற்றும் இளங்கோவன் செய்த கொடுமைகள் தெரிய வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து இருவரையும், போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #abused
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story