×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுற்றுசூழலை பாதுகாக்க "Smart Dustbin" - அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர்

smart dustbin introduced by tamilnadu cm

Advertisement

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதற்காக 'ஸ்மார்ட் டஸ்பின்' எனும் புதிய ரக குப்பைத்தொட்டியை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டால் சலுகை கூப்பன் கிடைக்குமாம். 

தமிழக அரசு கடந்த ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் பல பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு தமிழகம் முழுவதும் வெகுவாக குறைந்துள்ளது. 

இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நவீன "Smart Dustbin" எனப்படும் குப்பைத்தொட்டியை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது தான். 

இந்த நவீன "Smart Dustbin"-ல் சேகரிக்கப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் & குளிர்பான அலுமினிய டின்களுக்கும் Reverse Vending Machine மூலம் சலுகை கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகை கூப்பன்களைக் கொண்டு, அதில் குறிப்பிட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை சலுகை விலையில் மக்கள் பெறலாம்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் வகையிலும், சென்னையில் முதன்முறையாக "Smart Dustbin" (Reverse Vending Machine) பயன்பாட்டினை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Smart dustbin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story