×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசிரியரா நீயெல்லாம்.. ச்சை.., உடம்பெல்லாம் கூசுது.. மாற்றுத்திறனாளி பள்ளி ஆசிரியரின் காமுகம்., அதிரடி நடவடிக்கை.!

ஆசிரியரா நீயெல்லாம்.. ச்சை.., உடம்பெல்லாம் கூசுது.. மாற்றுத்திறனாளி பள்ளி ஆசிரியரின் காமுகம்., அதிரடி நடவடிக்கை.!

Advertisement

காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரில் தனியார் செவித்திறன் குறைவுள்ளோர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 85 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பல ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணையை தொடங்காமல் இருந்த நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமாதானம் செய்தனர். மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் கதிர்வேல் தலைமையில் பள்ளியில் நடந்த விசாரணையில், பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரஹாம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல் துறையினர் ஆசிரியர் ஆபிரகாமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றொரு ஆசிரியரையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sivaganga #teacher #Sexual Harassment #police #Investigation #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story