×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொந்த ஊருக்கு வந்தவர் முன்விரோதத்தில் வெட்டிப்படுகொலை.. சிவகங்கை அருகே சம்பவம்.!

சொந்த ஊருக்கு வந்தவர் முன்விரோதத்தில் வெட்டிப்படுகொலை.. சிவகங்கை அருகே சம்பவம்.!

Advertisement

முன்விரோத தகராறில் சொந்த ஊருக்கு வந்த இளைஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில், அழியாதிருத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் கோயம்புத்தூரில் உள்ள மதுபான விடுதியில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சண்முகம் விடுமுறை எடுத்து சொந்த ஊர் வந்திருந்த நிலையில், இன்று காலை புரசடை திறந்தவெளி சிறைச்சாலை அருகே, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காளையார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sivaganga #Kalayarkoil #man #Murder #police #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story