கமலுக்கே அல்வா கொடுத்த ம.நீ.ம வேட்பாளர்.. பூஜ்ய வாக்கு பரிதாபம்.! ட்ரோலில் நெட்டிசன்கள்.!
கமலுக்கே அல்வா கொடுத்த ம.நீ.ம வேட்பாளர்.. பூஜ்ய வாக்கு பரிதாபம்.! ட்ரோலில் நெட்டிசன்கள்.!
தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த பிப். 19 ஆம் தேதி நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி அமோக வெற்றியை உள்ளாட்சி தேர்தலிலும் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், சிவகங்கை நகராட்சியில், 1 ஆவது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய வேட்பாளர் செங்கோல். இன்று காலை முதல் 1 ஆவது வார்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதியில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வெற்றி அடைந்தது.
அதே வார்டில் ம.நீ.ம சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒரு வாக்குகள் கூட பெறவில்லை. இதனால் ம.நீ.ம வேட்பாளர் மற்றும் அவருடன் வந்தவர்கள் கவலையுடன் திரும்பி சென்றனர். வியப்பு என்னவென்றால் வேட்பாளரே அவருக்கு வாக்களித்தாரா? அவருடன் நின்ற அந்த 3 பேரும் அவருக்கு வாக்களித்தனரா? என்பது தான்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362