×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொடூரம்... போலி மருத்துவரின் சிகிச்சையால் 14 வயது சிறுவன் பரிதாப பலி.!

கொடூரம்... போலி மருத்துவரின் சிகிச்சையால் 14 வயது சிறுவன் பரிதாப பலி.!

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்  போலி டாக்டரின் தவறான சிகிச்சையால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது கோடை காலம் முடிந்து பருவமழை காலம் தொடங்கி இருப்பதால் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் மர்ம காய்ச்சல் மற்றும் சளியாகியவை மாநிலம் எங்கும் பரவி வருகின்றன.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சார்ந்த சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவன் காய்ச்சலால் அவதிப்பட்டு இருக்கிறான். இது தொடர்பாக கோபிநாத் என்பவரிடம் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அழைத்துச் சென்று இருக்கின்றனர் . அந்த நபர் சிறுவனுக்கு சிகிச்சையளித்து ஊசி போட்ட போது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் பதிவு செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் கோபிநாத் என்பவரை கைது செய்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Vaniyambadi #fakedoctor #injection #studentdeath
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story