×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி..கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து.. கல்லூரி மாணவர் பலி..!

அதிர்ச்சி..கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து.. கல்லூரி மாணவர் பலி..!

Advertisement

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டை கீழ தெருவில் வசித்து வருபவர் பால் சேகர். இவரது மகன் ரிஷால் கும்பகோணத்தில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரிஷால் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரிஷால் மன்னர்குடி - கும்பகோணம் பிரதான சாலையில் பயணித்துள்ளர். அப்போது ரிஷால் ரொக்ககுத்தகை அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ரிஷால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மன்னார்குடி காவல் துறையினர் ரிஷாலின் உடலை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இரு சக்கர வாகனம் மரத்தின் மீது மோதி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #Student Died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story